உச்சநீதிமன்ற உத்தரவால் பின்வாங்கிய பஞ்சாப் ஆளுநர்

by Staff / 17-11-2023 03:13:14pm
உச்சநீதிமன்ற உத்தரவால் பின்வாங்கிய பஞ்சாப் ஆளுநர்

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என்று கூறி பஞ்சாப் மாநில அரசு, அம் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில், தனது நிலைபாட்டில் இருந்து பின்வாங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது, பஞ்சாப் அரசு அனுப்பிய மசோதா ஒன்றுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். இவர் தமிழகத்தில் ஆளுநராக இருந்தபோது பல சர்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via