முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது வரதட்சணை புகார்

by Staff / 21-02-2024 03:05:32pm
முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது வரதட்சணை புகார்

சோழிங்கநல்லூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.கந்தன் மீது மருமகள் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். திருமணமான போதே 600 சவரன் நகை கொடுக்கப்பட்டதாகவும், மேலும் 400 சவரன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார். கே.பி.கந்தன் மீதும், அவரது மகன் கே.பி.கே.சதீஷ்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி பெண்ணின் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. .முன்னாள் எம்.எல்.ஏ மீது அவரது மருமகள் வரதட்சணை புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via