பாஜகவை நேரடியாக வம்புக்கு இழுக்கும் கார்த்தி சிதம்பரம்

by Staff / 25-02-2024 01:12:49pm
பாஜகவை நேரடியாக வம்புக்கு இழுக்கும் கார்த்தி சிதம்பரம்

பாஜக தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலை தனியாக சந்திக்க வேண்டும் என்பதையே விரும்புகிறேன் என சிவகங்கை காங்கிஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இ.வி.எம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. கடந்த தேர்தலில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் எனக்கு முழு திருப்தியாக உள்ளது. பலருக்கும் சந்தேகம் இருந்துள்ளது. அந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. அதனால் அனைத்து வி.வி.டி பேடையும் எண்ணிக்கை செய்து காண்பிக்க வேண்டும். அப்போதுதான் பலரது சந்தேகம் தீரும் என தெரிவித்தார்.

 

Tags :

Share via