லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து - 3 பேர் பலி

by Staff / 26-02-2024 04:34:53pm
லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து - 3 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பூர்வாஞ்சல் விரைவு சாலையில் நேற்று பயங்கர விபத்து நடந்துள்ளது. சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது கார் ஒன்று வேகாமாக மோதிய விபத்தில் காரில் இருந்த பெண், அவரது மகள், மருமகள் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டியவர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால் விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

Tags :

Share via