MLA-வின் மகன், மருமகளுக்கு ஜாமின்

by Staff / 01-03-2024 02:50:45pm
MLA-வின் மகன், மருமகளுக்கு ஜாமின்

பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இரண்டு வாரங்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக இதுவரை 16 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது எனவும் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via