3 மகன்களை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் தங்கதுரு கிராமத்தில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நீரதி ரவி (35) என்ற தனியார் நிறுவன ஊழியர் தனது மூன்று மகன்களான சாய்கிரண் (13), மோகித் குமார் (10), உதய் கிரண் (7) ஆகியோரைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். கடன் பிரச்சனையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ரவி, கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதால் விபரீத முடிவை எடுத்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :