திமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

by Staff / 05-03-2024 11:55:44am
திமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை வண்டலூர் பகுதியில் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி திமுக பிரமுகர் ஆராமுதன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கனகராஜ், அருண்ராஜ், நவநீதகிருஷ்ணன், மணிகண்டன் ஆகிய 4 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 20-ல் நேற்று சரணடைந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு படப்பை செல்லும் பிரதான சாலையில் கட்டப்பட்டிருந்த புதிய பேருந்து நிறுத்தத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக அவரது காரில் இரவு வந்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்த காரில் இருந்து இறங்கிய அடையாளம் தெரியாத 4 நபர்கள் ஆராமுதன் வந்த காரின் மீது நாட்டு வெடி குண்டை வீசி தாக்கியதோடு, பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

Tags :

Share via