Pegasus Spyware மூலம் எப்படி உளவு பார்க்கிறார்கள்?:.. அதிர்ச்சி தகவல்கள்.......வாட்ஸ்அப் எண்ணிற்கு மிஸ்ட்டு கால் ...
டெல்லி : பெகாசஸ் ஸ்பைவேர் ஈமெயில் அல்லது குறுஞ்செய்தி வழியாக கண்காணிக்கப்பட வேண்டிய நபரின் மொபைலுக்கு அனுப்பப்படும்.
இந்த குறிப்பிட்ட லிங்கை அவர் அழுத்தியதும் அந்த மொபைல் முழுவதுமாக கண்காணிப்பாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும்
.வாட்ஸ்அப் எண்ணிற்கு மிஸ்ட்டு கால் கொடுப்பதன் மூலமே அந்த செல்போனில் பெகாசஸ் ஸ்பைவேர் முழுமையாக ஊடுருவி விட முடியும்.
இவ்வாறு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட மொபைலில் உள்ள ஈமெயில், குறுஞ்செய்திகள், வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம்,
தொடர்பு எண்கள், பாஸ்வேர்ட், கேலண்டர் அழைப்புகள் என அனைத்தையும் பெற முடியும்.
செல்போனில் ஜிபிஎஸ் வசதி மூலம் அவர் எங்கு இருக்கிறார் என்பதையும் உளவு நிறுவனங்கள் அறிய முடியும்
.உளவு நிறுவனத்தினரால் செல்போனில் உள்ள கேமராவை இயக்கி விரும்பிய நேரத்தில் புகைப்படமோ, வீடியோவோ பதிவு செய்ய முடியும். உளவு வலையில் சிக்கியவர்களின் உரையாடலை தொலைவில் இருந்தபடியே பதிவு செய்யவும் முடியும்.
இதனால் உளவு நிறுவனங்கள் கண்காணிக்க விரும்பும் நபரை தொலைவில் இருந்தபடியே
அவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் ?
எங்கு இருக்கிறார் போன்ற தகவல்களை பெற முடியும்.
Tags :