மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை

by Staff / 08-03-2024 12:58:12pm
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை

சென்னை திரு. வி. க. நகர் பகுதியில் வசித்து வரும் 28 வயது இளம்பெண், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு, ஜோசப் ஆண்டனி (31) என்பவரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஜோசப் ஆண்டனி மது மற்றும் கஞ்சா பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. கடந்த மாதம் 29ம் தேதி இந்த இளம்பெண், பணி நிமிர்த்தமாக வெளியூர் சென்றிருந்தார்.அப்போது தனது 4 வயது மகளை மாமியார் வீட்டில் விட்டு சென்றிருந்தார். அதன் பிறகு கடந்த 3ம் தேதி, தனது மாமியார் வீட்டிற்கு சென்று, மகளை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், 4 வயது மகள் அடிக்கடி வயிறு வலிப்பதாக கூறியதால், அவளை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக தெரிவித்தனர்.மேலும் இதுபற்றி பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில், சிறுமியின் தாய் ஊருக்கு சென்றிருந்த நேரத்தில், தந்தை ஜோசப் ஆண்டனி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து நேற்று முன்தினம் ஜோசப் ஆண்டனியை கைது செய்த செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via