கேஸ் சிலிண்டர்கள் இலவசம் - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
வண்ணமயமான ஹோலி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநில மக்களிடம் உரையாற்றினார். உத்தரபிரதேச மக்களுக்கு பண்டிகை பரிசாக இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும். தீபாவளியை முன்னிட்டு, மாநிலத்தில் தகுதியானவர்களுக்கு 1.75 கோடி இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. இப்போது ஹோலிக்கும் அதே பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags :