ஜாபர் சாதிக் வழக்கு - என்ஐஏ விசாரணை

by Staff / 13-03-2024 04:39:01pm
ஜாபர் சாதிக் வழக்கு - என்ஐஏ விசாரணை

ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை டெல்லி என்.ஐ.ஏ. கேட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தீவிரவாத அமைப்புகளுக்கு சென்றுள்ளதா என்பது பற்றிய விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. ஏற்கனவே ஜாபர் சாதிக் வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில் தற்போது என்.ஐ.ஏ. அமைப்பும் விசாரணை மேற்கொண்டுள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via