குழந்தைகளை துன்புறுத்திய தாய்

by Staff / 13-03-2024 05:50:30pm
குழந்தைகளை துன்புறுத்திய தாய்

குமாரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவருக்கு ப்ரியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் குமார் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட, ப்ரியாவுக்கு மங்கலக்குன்று ஜெகன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு ப்ரியா வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அதன்பின்னர் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். அப்போது 14, 13, 10 வயதுள்ள மூன்று ஆண் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியேறி தனது அத்தை வீட்டில் தஞ்சம் புகுந்தனர். குழந்தைகளை காணவில்லை என ப்ரியா போலீசில் புகார் அளித்துள்ளார். அப்போது நடந்த விசாரணையில் குழந்தைகளை துன்புறுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தைகளை மீட்ட போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via