​​​​​​​மீண்டும் சீனாவை மிரட்டும் கொரோனா தொற்று

by Editor / 04-08-2021 06:06:12pm
​​​​​​​மீண்டும் சீனாவை மிரட்டும் கொரோனா தொற்று

 

2019ஆம் ஆண்டின் இறுதியில் உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று  வூஹான் நகரில் தான் கண்டறியப்பட்டது. அதன் பின்பு சுமார் 1.1 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த நகரம் கொரோனா தொற்றை பரப்பிய இடமாக  உலகெங்கும் பேசப்பட்டது.

வூஹானில் ஓராண்டு காலத்துக்கும் மேலாக கொரோனா தொற்று கண்டறியப்படாத சூழலில் தற்போது ஏழு பேருக்கு உள்நாட்டிலேயே நோய் பரவிருக்கும் நிலையில் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக சீனாவில் 15 மாகாணங்களில் கொரோனா  தொற்று குறைந்த சூழலில் கடந்த 10 நாட்களில் சுமார் 300 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வது மற்றும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பது போன்ற  நடவடிக்கைகளில் சீன அரசு இறங்கியுள்ளது. கொரோனா வைரஸ் திரிபுகளிலேயே மிகவும் எளிதில் பரவக்கூடிய தன்மை உடைய 'டெல்டா' வைரஸ் தான்  தற்போதைய வைரஸ் பரவலுக்கு காரணம் என்று சீன அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தங்கள் நாட்டு எல்லைக்குள்ளேயே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதை சீனா பெருமளவு வெற்றிகரமாக செய்து முடித்திருந்த நிலையில், தற்போது  சீனாவில் உள்ள நான்ஜிங் நகரத்திலுள்ள விமான நிலையத்தின் ஊழியர்கள் மூலம் முதன் முதலில் தொற்று தெரிய வந்தது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 92 லட்சம் மக்களுக்கும் மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்திய அரசு, பல்லாயிரம் பேர் வசிக்கும் பகுதிகளில் பொது முடக்கத்தையும் அமல்படுத்தியது.

ஆனால், சென்ற வார இறுதியில் ஹுனான் மாகாணத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான சாங்ஜியாச்சியில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான்ஜியாங் நகரத்துக்கு வந்த பயணிகள் இங்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது. சாங்ஜியாச்சியில் உள்ள ஒரு கலைக் கூடத்துக்குச் சென்ற சுமார் 5 ஆயிரம் பேரைக் கண்டறியும் முயற்சிகளில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கலைக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றுள்ளனர்.

 

Tags :

Share via