வாயில் விஷம் ஊற்றி மணப்பெண் கொலை

by Staff / 21-03-2024 12:13:29pm
வாயில் விஷம் ஊற்றி மணப்பெண் கொலை

கர்நாடக மாநிலம், ஹாவேரி ஹனகல் பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா. இவரது மகள் தீபா (21), இவருக்கும், உறவு முறை தாய்மாமன் மால்தேஷ் (35) என்பவருக்கும், கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. வருகின்ற ஏப்ரல் 22ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் மால்தேஷை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என அவரிடம் கூறியுள்ளார். ஆனால் என்னைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என மால்தேஷ் கூறியுள்ளார். இந்நிலையில், வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தில், தீபா தூக்கில் சடலமாகத் தொங்கினார். முதலில் தற்கொலை என குடும்பத்தினர் நினைத்தனர். பின்னர் போலீசார் விசாரணையில் மால்தேஷ் தீபா வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்து  தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via