வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வோம்: எடப்பாடி பழனிச்சாமி

by Staff / 21-03-2024 02:03:51pm
வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வோம்: எடப்பாடி பழனிச்சாமி

அமலாக்கத்துறை வழக்குகளை சட்டபடி எதிர்கொள்வோம் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.அமலாக்கத்துறை விசாரணை குறித்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் முதல் முறையாக மனந்திறந்து பேசியுள்ளார். அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பேசிய அவர், 11 "அதிமுக நிர்வாகிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்வோம். எம். ஜி. ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே நெருக்கடிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக. அதிமுகவை பலவீனமான கட்சி என்று கருத வேண்டாம்" என்றார்.

 

Tags :

Share via