பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா திருக்கல்யாணம் நாளை நடைபெறுகிறது.

by Editor / 22-03-2024 09:16:59am
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா திருக்கல்யாணம் நாளை நடைபெறுகிறது.

பழனி திருஆவினன்குடி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இன்று வெள்ளிக்கிழமை இரவு பழனி மலைக்கோவிலில் சின்ன குமாரசுவாமி தங்கரதத்தில் உலா எழுந்தருளுகிறார் நாளை (சனிக்கிழமை) திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாலை 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அடுத்த நாள் 24-ந்தேதி பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடக்கிறது.

 

Tags : பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா திருக்கல்யாணம் நாளை நடைபெறுகிறது

Share via