262 போலி மதுபாட்டிலுடன் 2 பேர் கைது

by Staff / 23-03-2024 04:57:16pm
262 போலி மதுபாட்டிலுடன் 2 பேர் கைது

ஈரோடு, மதுவிலக்கு டி. எஸ். பி. , சண்முகம், நேற்று காலை ரோந்து சென்றார். ஈரோட்டில் பச்சபாளி ஒயின் ஷாப் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தார். அவரிடம் இருந்த மூட்டையை சோதித்ததில், 202 போலி மது பாட்டில்கள் இருந்தன.

விசாரணையில், 46 புதுார் நொச்சிகாட்டு வலசு கார்த்தி, 34, என்பது தெரியவந்தது அவரை கைது செய்தனர்.
சோலார் புதுார். ஒயின் ஷாப் அருகே, தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் காவாலிபட் டியை சேர்ந்த காளீஸ்வரன், 29, பிடிபட்டார்.

அவரிடம் இருந்து, 60 போலி மது பாட்டில் பறி முதல் செய்யப்பட்டது. இருவ ரிடமும் சிக்கிய, 262 போலி மதுபாட்டிலின் தரம் குறித்து அறிய, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் இதன் அடுத்த கட்ட விசாரணை இருக்கும் என்று, மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர்.
 

 

Tags :

Share via