மாமனாரை லாரியை மோதவிட்டு கொன்ற மருமகன்

by Staff / 05-04-2024 03:17:47pm
மாமனாரை லாரியை மோதவிட்டு கொன்ற மருமகன்

தூத்துக்குடியை சேர்ந்த துரை கடந்த 1ஆம் தேதி பைக்கில் சென்ற போது லாரி மோதியதில் உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் லாரி உரிமையாளர் நாகராஜ், ஓட்டுனர் சிவராமை கைது செய்து விசாரித்தனர். அதில், துரைக்கும் அவர் மருமகன் சின்ன குமாரராஜாவுக்கும் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்ததையடுத்து ஏற்பட்ட ஆத்திரத்தில் துரையை சின்ன குமாரராஜா கொல்ல சொன்னதாக கூறினர். இதனையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via