தாயும், 4 மாத பெண் குழந்தையும் சடலமாக மீட்பு
கேரளாவின் காசர்கோடு மாவட்டம் முளியாரில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு பெண்ணும் அவரது நான்கு மாத பெண் குழந்தையும் இறந்து கிடந்தனர். முளியார் அருகே கொப்பளம் கொச்சியை சேர்ந்த பிந்து (28) என்ற பெண் தனது நான்கு மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் அவரது மற்றொரு மகன் பத்திரமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிந்து தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.குடும்பப் பிரச்னையே இந்த கொடூரச் செயலுக்குக் காரணம் என ஆத்தூர் போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணைக்குப் பிறகு தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் காசர்கோடு பொது மருத்துவமனை உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
Tags :