பாகிஸ்தானில் பேருந்தில் குண்டு வெடிப்பு-: 13 பேர் பலி

by Editor / 15-07-2021 10:16:36am
பாகிஸ்தானில் பேருந்தில் குண்டு வெடிப்பு-: 13 பேர் பலி

பாகிஸ்தானில் சீனப் பொறியாளர்கள் சென்ற பேருந்தில் திடீரென குண்டு வெடித்து அதில் பயணம் செய்தவர்கள் சிதறி பலியாகினர். பாகிஸ்தானில் அணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சீனப் பொறியாளர்கள் பயணம் செய்த பேருந்து மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் பேருந்தில் இருந்த 9 சீனப் பொறியாளர்கள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளனபாகிஸ்தானில் உள்ள வடக்கு பகுதியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த 30 சீனப் பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினர் ஏற்றி சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதலில் 9 சீனப் பொறியாளர்கள் மற்றும் 2 துணை ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் பலியாகி உள்ளதாகவும் பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளன. 

 

Tags :

Share via