பள்ளம் தோண்டும் போது சிக்கிய வெடிகுண்டு

by Staff / 06-12-2022 12:55:40pm
பள்ளம் தோண்டும் போது சிக்கிய வெடிகுண்டு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மாட்டு தொழுவத்தில் பள்ளம் தோண்டும் போது ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய ராக்கெட் லாஞ்சர் என்னும் வெடிகுண்டு கிடைத்துள்ளது. அதை 3 நாட்களாக போலீசார் பாதுகாத்து வருகின்றனர். பாபர் மசூதி இடிப்பு தின சோதனை மற்றும் திருவண்ணாமலை தீபத்திருவிழா பணியில் வெடிகுண்டு நிபுணர் குழு இருப்பதால், தாமதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via