பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமீன் நீதிபதி திரிவேணி உத்தரவு.

by Editor / 15-12-2023 07:46:20pm
 பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமீன் நீதிபதி திரிவேணி உத்தரவு.

 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட  காவல் நிலையங்களான அம்பாசமுத்திரம், வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில்  விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை ஏ.எஸ்.பி.பல்வீர் சிங் உள்ளிட்ட காவல்துறையினர் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட  குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சேரன்மகாதேவி சார ஆட்சியர் சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக  நியமிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள், காவல் துறையை சார்ந்தவர்களிடம்  விசாரணை நடைபெற்றது தொடர்ந்து மேலும் பலர் பல்வீர் சிங் மற்றும்  காவல்துறையினர் மீது புகார் அளித்த நிலையில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா  சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார் அவர் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 80 திற்கும்  மேற்பட்டவர்களிடம்  விசாரணை நடத்தினார். 
  இந்த நிலையில் பல் பிடுங்கிய விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு  மாற்றி    தமிழக அரசு உத்தரவிட்டது இதனை அடுத்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி சங்கர் தலைமையிலான சிபிசிஐடி காவல்துறை நான்கு வெவ்வேறு புகார்களின் அடிப்படையில் நான்கு வழக்குகளை பதிவு செய்தனர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் உள்ளிட்ட 15 பேர் இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக உள்ளனர்.   தொடர் விசாரணையில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது தலா 250 பக்கங்களுக்கு மேலாக உள்ள இந்த குற்றப்பத்திரிகை தாக்கல்  செய்யப்பட்ட தை அடுத்து வழக்கு விசாரணை இன்று துவங்கியது.  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விசாரணை நகல் வழங்கப்பட்டது நீதித்துறை நடுவர் திரிவேணி இன்று காலை முதல் வழக்கு விசாரணையை மேற்கொண்டார் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் மகாராஜன், மாடசாமி ஆகியோர் பல்வீர்சிங் உள்ளிட்ட காவல்துறையினரை கைது செய்ய வேண்டும் அவர்களை பிணையில் விடக்கூடாது பற்களை பிடுங்கிய பயன்படுத்திய கட்டிங் பிளேயர்,  கற்கள்  ரத்தக்கரை படிந்த துணிகள் என எதையும் சிபிசிஐடி காவல்துறை கைப்பற்ற வில்லை  என வாதிட்டனர் வழக்கு விசாரணை நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது . இதனிடைய பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மனு அளித்தனர்.  மாலை ஐந்து நாற்பத்தி ஐந்து மணிக்கு 15 நபர்களையும் தலா இரண்டு நபர்கள் உத்தரவாதத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்கி  நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 

 

Tags : பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமீன் நீதிபதி திரிவேணி உத்தரவு.

Share via