லாரியை முந்தி செல்ல முயன்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழப்பு

by Staff / 06-06-2022 02:06:11pm
 லாரியை முந்தி செல்ல முயன்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழப்பு

கேரள மாநிலம் மலப்புறத்தில் அதிவேகத்தில் சென்ற கார் எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளான காட்சி வெளியாகியுள்ளன.கொண்டோட்டி  முறையூர் சாலையில் அதிகாலையில் அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று லாரியை முந்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சாலையோரம் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்தார். காரின் அடியில் சிக்கிக்கொண்ட இருசக்கரவாகனம் சிறிது தூரத்தில் சாலையில் இ ழுத்து செல்லப்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மலப்புரம் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via