முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 20-08-2023 01:25:29pm
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை, போலீசார் கைது செய்தனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணில், நேற்று அதிகாலை 1: 30 மணிஅளவில், மர்ம நபர் ஒருவர் பேசினார். அப்போது, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் கூறி, இணைப்பை துண்டித்து உள்ளார். உடனே, காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், முதல்வரின் பாதுகாப்பு வீரர்கள், மோப்ப நாய் ஜூடி உதவியுடன், இரண்டு மணி நேரம் தீவிரமாக சோதனை செய்தனர். இதில், வெடி பொருட்கள் ஏதும் கிடைக்காததை தொடர்ந்து, வெறும் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்தவர், கன்னியாகுமரியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பது தெரியவந்தது. அவரை பூதப்பாண்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via