ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்த பெண்

by Staff / 21-03-2023 05:01:12pm
ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்த பெண்

ஏற்காட்டின் அசம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பார்வதி என்ற பெண் சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு கையில் துப்பாக்கியுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவர் பயன்படுத்தி வந்த உரிமம் பெற்ற நாட்டுத் துப்பாக்கியை அவர் இறந்துவிட்டதால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க கொண்டு வந்தததாக தெரிவித்தார். மேலும், பார்வதியின் கணவர் காவல்துறையில் உரிமம் பெற்று கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி வந்துள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via