பிஎச்டி மாணவர் கொடூரக்கொலை... உடலை துண்டாக்கி வீசிய பயங்கரம்
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. மோடிநகரைச் சேர்ந்த உமேஷ் சர்மா என்ற நபர் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பிஎச்டி மாணவர் அங்கித் கோகரை கொடூரமாகக் கொலைசெய்து . பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசி சென்றுள்ளார். இச்சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. சமீபத்தில் தான் இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட உமேஷ் சர்மா மற்றும் அவரது நண்பர் பர்வேஷ் ஆகியோரை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.பிஎச்டி மாணவர் அங்கித்தை, உமேஷ் சர்மா ரூ.100க்காக கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் உடலைத் துண்டிக்கப் பயன்படுத்திய மரக்கட்டைகள், கருகிய ஆடைகள், அங்கித்தின் தலைமுடி மற்றும் இரத்தக் கறைகளை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கித்தின் நண்பர்கள் 3 வாரங்களாக போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. அவர்கள் போலீசில் புகார் செய்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கொலை அரங்கேறியது கண்டுபிடிக்கப்பட்டது.
Tags :