ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

by Staff / 03-11-2023 01:27:35pm
ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவில் மர்ம நபர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார்.அதில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சில மணி நேரங்களில் அது வெடித்து சிதறும் எனவும் தெரிவித்து தொடர்பை துண்டித்துள்ளார். அதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் ரயில் நிலையம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் தேடினர். அதில் மிரட்டல் விடுத்தது புரளி என தெரிய தெரியவந்தது. இதையடுத்து தொலைபேசி எண்ணை கொண்டு இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் மர்ம நபரை வலை வீசி தேடி வந்தனர். தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் விசாரித்ததில் மர்ம நபர் ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்த இருப்புப் பாதை காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மர்ம நபரை கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில் மகாராஷ்டிரா மாநில சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் பாலாஜி(52) என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சந்தோஷ் பாலாஜியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via