நெல்லை மாநகரப் பகுதியில் 4052 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

by Editor / 15-02-2023 03:16:55pm
நெல்லை மாநகரப் பகுதியில் 4052 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நெல்லை மாநகரப் பகுதியில் அதிவேகமாக வாகன ஓட்டுதல் மது போதையில் வாகன ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறிய  வாகன ஓட்டிகள் 4052 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 563 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.தலைக்கவசம் அணியாமல் வாகனம் இயக்கிய குற்றத்திற்காக 1265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நெல்லை மாநகர காவல் துறை பரிந்துரை செய்துள்ளது என நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன்தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via