போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்

by Staff / 06-04-2024 11:33:37am
போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துக் கொண்ட ஆசிரியர்களின் 19 நாட்களுக்கு உரிய சம்பளம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்ய வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு பள்ளி கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via