இன்று ப்ளஸ் 2 துணைத் தேர்வு

by Editor / 06-08-2021 08:47:23am
இன்று ப்ளஸ் 2 துணைத் தேர்வு

¯

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி செய்யப் பட்டனர்.மாணவர்களின் 10, 11ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 19ஆம் தேதி வெளியானது.

அதேநேரம் தனித்தேர்வர்களுக்கு ப்ளஸ் 2 தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தனித் தேர்வர்களுக்கான ப்ளஸ் 2 துணைத் தேர்வு இன்று (06.08.21) தொடங்கி 19ஆம்தேதி வரை நடைபெறுகிறது.

முதல் நாளில் தமிழ் உள்ளிட்டமொழிப்பாடத் தேர்வுகள் நடை பெறும் . இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 45,654 தனித் தேர்வர்கள் எழுதவுள்ளனர் . அதனுடன் பிளஸ் 2 தேர்வு முடிவில் மதிப்பெண்ணில் திருப்தியில்லாத 25 பள்ளி மாணவர்களும் இத்தேர்வில் கலந்து கொள்கின்றனர் .

தேர்வு மையங்களில் தனிநபர்இடைவெளி , முகக் கவசம் அணிதல் , கிருமிநாசினி பயன்பாடு உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via