பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு

by Staff / 08-04-2024 11:42:47am
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அவர் மீதும் ஆதரவாளர்கள் 25 பேர் மீதும் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் நயினார் நாகேந்திரன் ஈடுபட்டதாக தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர். இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via