பூரி சுட்டு பொதுமக்களுக்கு பரிமாறி உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் நூதனமான முறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர் இந்த நிலையில் ஆரணி நாடாளுமன்ற வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தீவனூர், வெங்கந்தூர், கொள்ளாறு, ரெட்டணை,பெரமண்டூர்போன்ற பல்வேறு பகுதிகளில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தரணி வேந்தனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.அப்பொழுது தீவனூரில் உள்ள ஹோட்டலுக்குச் சென்று பூரி சுட்டு பொது மக்களுக்கு பரிமாறி உதயசூரியன் சின்னத்திற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தார்.
Tags : பூரி சுட்டு பொதுமக்களுக்கு பரிமாறி உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்