அடையாளம் இன்றி அமைக்கப்பட்ட வேகத்தடையால் பறிபோன பெண் ஆய்வாளர் உயிர்.

by Editor / 10-04-2024 06:47:02pm
அடையாளம் இன்றி அமைக்கப்பட்ட வேகத்தடையால் பறிபோன பெண் ஆய்வாளர் உயிர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (45). இவர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டம் ஒழுங்கு 2-ம் எண் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 7ம் தேதி இரவு பணியில் இருந்து வீட்டிற்கு கணவருடன் இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார்.

புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது, எந்தவித அடையாளமும் இன்றி புதிதாக அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் அவர்களது இருசக்கர வாகனம் சென்றபோது எதிர்பாராத விதமாக    வேகத்தடையில்   கட்டுப்பாட்டை இழந்த அந்த இருசக்கர  வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது கீழே விழுந்த காவல் ஆய்வாளர் பிரியாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் யாரும் எதிர்பாராவிதமாக நேற்று மதியம் சிகிச்சைப் பலனின்றி ஆய்வாளர்  பிரியாபரிதாபமாக பலியானார்.இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

காவல் ஆய்வாளர் பிரியாவின் இறுதிச் சடங்கில் புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே  கலந்துகொண்டு காவல் ஆய்வாளர் பிரியாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமின்றி அவரது உடலை மயானம் வரை சுமந்து சென்றார்  தொடர்ந்து அவரது தலைமையில் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க ஆய்வாளர் பிரியா உடலுக்கு காவல்துறையினர் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

 

Tags : அடையாளம் இன்றி அமைக்கப்பட்ட வேகத்தடையால் பறிபோன பெண் ஆய்வாளர் உயிர்.

Share via