திகார் சிறையில் உள்ள கேசிஆர் மகள் கவிதா கைது

by Staff / 11-04-2024 03:26:41pm
திகார் சிறையில் உள்ள கேசிஆர் மகள் கவிதா கைது

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆரின் மகளுமான கவிதா திகார் சிறையில் உள்ளார். தற்போது அவர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றது தொடர்பாக கவிதாவை சிபிஐ கைது செய்துள்ளது. முன்னதாக நீதிமன்ற அனுமதியை பெற்று சிபிஐ அதிகாரிகள் நேற்று கவிதாவிடம் விசாரணை நடத்தினர்.

 

Tags :

Share via