மாலத்தீவு சுற்றுலாவை மேம்படுத்த இந்தியாவில் ரோடு ஷோ
பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் லட்சத்தீவு சென்ற நிலையில் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்கள் அவரை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவு வெளியிட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இந்திய சுற்றுலாப் பயணிகள் பலரும் மாலத்தீவு செல்வதை தவிர்த்தனர். இதனால், அவர்களுக்கு வருவாயும் குறையத் தொடங்கியது. தற்போது மாலத்தீவு சுற்றுலாவை மேம்படுத்த இந்தியாவில் ரோடு ஷோ நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
Tags :