மதுக்கடைக்கு படையெடுத்த குடிமகன்கள்

by Staff / 17-04-2024 03:04:39pm
மதுக்கடைக்கு படையெடுத்த குடிமகன்கள்

மக்களவை தேர்தலையொட்டி இன்று முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால், அரசு மதுபான கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் மக்களவை தேத்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மதுக்கடைகளை இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் அரசு மதுபான கடைகளில் கூட்டம் கூட்டமாக வந்து மது வகைகளை வாங்கிச்சென்றனர். மூன்று நாட்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைக்க மது பிரியர்கள் ஆர்வம் காட்டினர்.

 

Tags :

Share via