அண்ணனை காப்பாற்றப் போய் தம்பியும் நீரில் மூழ்கி பலி

by Staff / 17-04-2024 05:23:11pm
அண்ணனை காப்பாற்றப் போய் தம்பியும் நீரில் மூழ்கி பலி

கடலூர் காட்டுமன்னார்கோவில் நந்தீஸ்வரர் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன்கள் திலீப்ராஜ்(16), தினேஷ்(14). இருவரும் வீட்டின் அருகே இருக்கும் கோயில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அண்ணன் திலீப் நீரில் மூழ்கி தத்தளித்ததாக கூறப்படுகிறது. அவரைக் காப்பாற்றுவதற்காக குளத்தில் இறங்கிய தம்பி தினேஷும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இருவரின் உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via