தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர் மாரடைப்பால் மரணம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய தேர்தல் பறக்கும் படை சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் (55) மாரடைப்பால் உயிரிழந்தார்.தேர்தல் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்ல பேருந்தில் ஏறியபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் ஏற்கனவே சேலத்தில் 2 வாக்காளர்களும், திருத்தணியில் ஒருவரும் உயிரிழந்த நிலையில் காவலரின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :