முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் போலீசாரிடம் வாக்குவாதம்

by Editor / 02-11-2022 02:51:08pm
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் போலீசாரிடம் வாக்குவாதம்

விருதுநகரில் நடைபெறும் புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழக அரசு மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல இருந்த அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திருப்பரங்குன்ற சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாஉள்ளிட்டோர் தனியார் மஹால் முன்பு அவரை சந்திக்க வேண்டும் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து., எம்எல்ஏ., முன்னாள் அமைச்சர் சென்ற முறையில் எங்களை உள்ளே விடவில்லை என்றாலும்., வழக்கறிஞர்கள் என்ற முறையில் எங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via