நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் செந்தில் பாலாஜி

by Staff / 22-04-2024 04:10:47pm
நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. தொடர்ந்து அவருக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறையில் இருந்து அவரை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜராகி வங்கி ஆவணங்களை பெற்று கொண்ட நிலையில் நீதிமன்ற காவல் வரும் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via