மதுரை வைகையாற்றின் கரையோரம் வாலிபர் படுகொலை

by Staff / 23-04-2024 11:44:13am
மதுரை வைகையாற்றின் கரையோரம் வாலிபர் படுகொலை

மதுரை வைகையாற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடந்து வந்த சூழலில் ஆழ்வார்புரம் அருகே உள்ள இளநீர் கடை அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் இருந்த மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார்.சித்திரை திருவிழா நேரத்தில் இக்கொலை சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via