சட்ட ஒழுங்கை காக்க செயல்படுங்கள்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

by Staff / 04-05-2024 04:35:58pm
சட்ட ஒழுங்கை காக்க செயல்படுங்கள்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது, ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம். ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் சட்டம் ஒழுங்கை காக்க ஆக்கப்பூர்வத்துடன் செயல்படுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via