உறவினர்கள், வக்கீல்கள் சிறை கைதிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை

by Admin / 09-08-2021 04:16:29pm
உறவினர்கள், வக்கீல்கள் சிறை கைதிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை

 

சிறைவாசிகளுக்கு மருத்துவம் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்று கட்டுப்பாடுகளுடன் சந்திக்க அரசு அனுமதிக்க வேண்டும் என அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும் வக்கீல் பிரிவு இணை செயலாளருமான பாபு முருகவேல், முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அரசு அறிவித்து வருகிறது. பொது போக்குவரத்தும் சில கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் உள்ளது.

அதனை தொடர்ந்து சிறைவாசிகளை உறவினர்களும், வக்கீல்களும் சந்தித்து பேசவும் மருத்துவம் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்று கட்டுப்பாடுகளுடன் சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

இதன் மூலம் தமிழக சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான சிறைவாசிகளின் மன அழுத்தம் குறைவதோடு வழக்குகளை விரைந்து முடிக்கின்ற பட்சத்தில் அரசுக்கான செலவும் குறையும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via