ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தங்கவேலு அதிரடியாக கைது.

by Editor / 06-04-2022 08:51:32am
ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தங்கவேலு அதிரடியாக கைது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக பணியாற்றி வருபவர் தங்கவேலு இவர் தனியார் துணி விற்பனையாகத்தின் உரிமையாளரிடம் அலுவலகத்தில் வைத்து  ரூபாய்  5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அதிரடியாக கைது செய்யப்பட்டார். நிலத்தகராறு தொடர்பாக வழக்கில் அந்த வழக்கை முடித்து கொடுத்ததற்காக மிரட்டி லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் குமரி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Tags :

Share via