ஆக,.19-ல் அன்று நடந்த நிகழ்வுகள் 

by Editor / 18-08-2021 06:39:56pm
ஆக,.19-ல் அன்று நடந்த நிகழ்வுகள் 

 

கிமு 295 – அன்பு, அழகு, கருவுறுதல் ஆகியவற்றுக்கான உரோமைக் கடவுள் வீனசுக்கு முதலாவது உரோமைக் கோவில் கட்டப்பட்டது.
14 – உரோமைப் பேரரசர் அகஸ்டசு 44 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார். அவரது வளர்ப்பு மகன் திபேரியசு பேரரசரானார்.
1153 – மூன்றாம் பால்ட்வின் எருசலேமின் ஆட்சியை அவரது தாயார் மெலிசென்டியிடம் இருந்து பெற்றார்.
1458 – இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1561 – 13 ஆண்டுகள் பிரான்சில் வசித்து வந்த ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி தனது 18-வது அகவையில் இசிக்கொட்லாந்து திரும்பினார்.
1612 – இங்கிலாந்தின் 'சாம்லசுபரி' என்ற இடத்தில் மூன்று பெண்கள் மந்திரவாதிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணக்குட்படுத்தப்பட்டனர். பிரித்தானிய வரலாற்றில் இது ஒரு பெரும் சூனியக்காரிகள் வேட்டை எனப் புகழ்பெற்றது.
1666 – இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: டெர்செல்லிங் என்ற இடச்சுத் தீவின் மீது ஆங்கிலேயக் கடற்படைத் தளபதி ராபர்ட் ஓல்ம்சு தாக்குதல் மேற்கொண்டு 150 வணிகக் கப்பல்களை அழித்தார்.
1745 – உதுமானிய-பாரசீகப் போர் (1743–46): நாதிர் ஷா தலைமையிலான பாரசீகப் படைகள் உதுமானியர்களை கார்சு என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடித்தனர்.
1759 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே கடற் போர் இடம்பெற்றது.
1772 – சுவீடனில் மூன்றாம் குஸ்தாவ் இராணுவப் புரட்சியை மேற்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றினார்.
1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: யோர்க்டவுன் முற்றுகையில் பிரித்தானியத் தளபதி காரன்வாலிஸ் சரணடைந்த 10 மாதங்களின் பின்னர், மிக முக்கியமான கடைசிச் சமர் புளூ லிக்சு என்ற இடத்தில் இடம்பெற்றது.
1839 – லூயி தாகர் கண்டுபிடித்த புகைப்பட செயல்முறையை "உலகத்துக்கு அன்பளிப்பாக வழங்குவதாக" பிரெஞ்சு அரசு அறிவித்தது.
1848 – கலிபோர்னியா தங்க வேட்டை: ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் தங்க வேட்டை பற்றிய செய்தியை நியூயார்க் எரால்டு பத்திரிகை வெளியிட்டது.
1854 – அமெரிக்க இராணுவத்தினர் லகோட்டா பழங்குடித் தலைவரைக் கொன்றதை அடுத்து லகோட்டா போராளிகள் அனைத்து 31 இராணுவத்தினரையும், ஒரு மொழிபெயர்ப்பாளரையும் கொன்றனர்.
1862 – அமெரிக்க இந்தியப் போர்கள்: மினசோட்டாவில் லகோட்டா பழங்குடிப் போராளிகள் நியூ ஊல்ம் குடியேற்றத்தைத் தாக்கி பல வெள்ளையர்களைக் கொன்றனர்.
1866 – இலங்கையில் முதல் தடவையாக தந்திச் செய்தி நியூயோர்க்கில் இருந்து காலி நகரை வந்தடைந்தது.[1]
1895 – கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.[2]
1919 – ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானித்தான் முழுமையான விடுதலை அடைந்தது.
1927 – உருசிய மரபுவழித் திருச்சபையின் தலைவர் செர்ச்சியசு சோவியத் ஒன்றியத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
1934 – செருமனியில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பியூரர் என்ற பெயருடன் இட்லரை அரசுத்தலைவராக 89.9% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: தியப் தாக்குதல்: கனடாவின் தலைமையில் நேச நாடுகளின் படையினர் பிரான்சின் தியப் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தித் தோல்வியடைந்தனர். பெரும்பாலான கனடியப் படைகள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பாரிசின் விடுவிப்பு: செருமனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நட்பு நாடுகளின் உதவியுடன் பாரிசு தாக்குதலைத் தொடுத்தது.
1945 – ஆகத்துப் புரட்சி: ஹோ சி மின் தலைமையில் வியட் மின் படையினர் வியட்நாமின் அனோய் நகரைக் கைப்பற்றினர்.
1953 – பனிப்போர்: அஜாக்ஸ் நடவடிக்கை: ஈரானில் அமெரிக்காவின் உளவுத்துறையின் உதவியுடன் முகம்மது மொசாதெகின் அரசு கவிழ்க்கப்பட்டு, முகம்மத் ரிசா ஷா பஹ்லவி பதவியில் அமர்த்தப்பட்டார்.
1955 – ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே, பெரும் வெள்ளத்துடன் கூடிய சூறாவளி தாக்கியதில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1960 – பனிப்போர்: மாஸ்கோவில் கைப்பற்றப்பட்ட அமெரிக்க யூ-2 போர்விமானத்தின் விமானி பிரான்சிசு பவர்சு என்பவருக்கு சோவியத் ஒன்றியம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.
1960 – இசுப்புட்னிக் திட்டம்: சோவியத்தின் இசுப்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்திரெல்கா என்ற இரு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1964 – சின்கொம் 3 என்ற முதலாவது புவிநிலை தகவற் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
1978 – ஈரானில் திரையரங்கு ஒன்று தீப்பிடித்ததில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தன்ர்.
1980 – சவூதி அரேபியா, ரியாத் நகரில் சவூதியா 163 என்ற விமானம் தரையில் மோதித் தீப்பிடித்ததில் 301 பேர் உயிரிழந்தனர்.
1981 – அமெரிக்கப் போர் விமானங்கள் சித்ரா வளைகுடாவில் இரண்டு லிபிய வான்படை விமானங்களைத் தாக்கி அழித்தனர்.
1987 – ஐக்கிய இராச்சியம், ஹங்கர்ஃபோர்ட் என்ற இடத்தில் மைக்கேல் ராயன் என்பவன் 16 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
1989 – பனிப்போர்: போலந்தின் பிரதமராக சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் டாடியூஸ் மசவியேக்கி அரசுத்தலைவர் யாருசெல்ஸ்கியினால் தெரிவுசெய்யப்பட்டார். 42 ஆண்டுகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் முதல் கம்யூனிஸ்ட் அல்லாத பிரதமர் இவரே ஆவார்.
1991 – ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் கிரிமியாவில் ஓய்வெடுக்கும் போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1999 – பெல்கிறேட் நகரில், பல்லாயிரக்கணக்கான செர்பியர்கள் யுகோசுலாவிய அரசுத்தலைவர் சிலோபதான் மிலொசேவிச்சைப் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2002 – உருசிய மில் எம்.ஐ-26 உலங்குவானூர்தி மீது செச்சினியத் தீவிரவாதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 118 உருசியப் படையினர் கொல்லப்பட்டனர்.
2003 – இசுரேல், எருசலேம் நகரில் பேருந்து ஒன்றின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், பல சிறுவரக்ள் உட்பட 23 இசுரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
2003 – ஈராக்கின் ஐநா தூதரகம் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் உயர் அதிகாரி மற்றும் 21 பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
2009 – ஈராக், பகுதாது நகரில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில், 101 பேர் கொல்லப்பட்டனர். 565 பேர் காயமடைந்தனர்.
2010 – ஈராக்கிய விடுதலை நடவடிக்கை முடிவுக்கு வந்தது. கடைசி அமெரிக்க தாக்குதல் படைகள் எல்லை தாண்டி குவைத் சென்றனர்.
2013 – இந்தியாவின் பீகார் மாநிலத்தில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்தன்ர்.

 

Tags :

Share via