14 பேரை வீட்டிற்குள் புதைத்த சீரியல் கொலையாளி
கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில், விபச்சாரம் செய்பவர்களை குறிவைத்து கொல்லும் சீரியல் கொலையாளி பற்றிய திடுக்கிடும் உண்மை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைக்கோ கொலையாளியான நபர் ஒருவர், பெண்களை கொலை செய்துவிட்டு, நகை, போன் உள்ளிட்ட பொருட்களை திருடி வீட்டிற்குள்ளேயே புதைத்து விடுவது வழக்கம். இதுபோன்ற தொடர் குற்றங்களை அவர் செய்து வரும் நிலையில், ருவாண்டா தலைநகர் கிகாலி போலீசாருக்கு தகவல் கிடைத்து அவரை கைது செய்தனர். குற்றவாளியின் வீட்டில் 10 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் 4 உடல்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags :