பல்லடத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்

by Staff / 04-09-2023 04:14:35pm
பல்லடத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிண்று கிராமத்தில் நேற்று வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்டபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த செந்தில்குமார், மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாளா ஆகிய 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 23 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. பல்லடம் நால்வர் கொலை சம்பவத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலை ஒட்டி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், பல்லடம் பகுதியில் சுமார் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via