பல்லடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்
பல்லடம் பஸ் நிலையம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்பை உரு வாக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க ஒன்றிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற் றது. முன்னதாக பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முன்பு இருந்து பேரணி தொடங்கி பல்லடம் பஸ் நிலையம் முன்பாக சென்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அரசின் நடவடிக்கை களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், பவித்ரா தேவி மற் றும் பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர். பரமசிவம், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் பி. பாலன் உள்பட ஏராளமானவர்கள் கலந் துகொண்டனர். சாலை மறியல் போராட்டத்தை முன்னிட்டு பல் லடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags :