தரமற்ற புளியந்தோப்பு குடியிருப்பு - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

by Editor / 20-08-2021 10:43:17am
தரமற்ற புளியந்தோப்பு குடியிருப்பு - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

தரமற்ற புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டப்பட்ட விவகாரத்தில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் அமைச்சர்கள் அன்பரசன், சேகர் பாபு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.அத்துடன் இதுகுறித்து எம்எல்ஏ பரந்தாமன் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தொட்டால் சிணுங்கி பார்த்திருக்கிறோம், ஆனால் தொட்டாலே விழுகின்ற சிமெண்டை கண்டு பிடித்த ஆட்சி கடந்த அதிமுக ஆட்சி. கடந்த ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை. கட்டட ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் ,சீமான், கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via