80 இலட்சம் ரொக்கம்,100 பவுன் நகை கொள்ளை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை நெடுஞ்சாலைகுடி பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம். இவரின் மனைவி கமலம்(58). இவர்கள் இருவரும் தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் சந்திப்பதற்காக வெளியில் சென்றுள்ளனர். இன்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு வந்து நடத்திய விசாரணையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 100 பவுன் தங்க நகைகள், 80 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
Tags : 80 இலட்சம் ரொக்கம்,100 பவுன் நகை கொள்ளை